Advertisement

தென்காசி அருகே 20 லட்சம் மோசடி – 4 பேர் கைது

தென்காசி பகுதியில் மோசடி ரூ.20.லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு கேரளா தப்பிய ஓடிய குற்றவாளிகள்
4 நபர்களை கைது செய்த போலீசார் .

தென்காசி மாவட்டம், வடகரை பகுதியை சேர்ந்த ஜிந்தாமாதர் என்பவர் . காவல் நிலையத்திற்கு சென்று, தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு நகை வாங்கித் தருவது போல் நடித்து தன்னுடைய பணம் ரூ. 20.77 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டதாக புகார் ஒன்றினை கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றம் சாட்டப்பட்ட குறிப்பிட்ட அந்த நபரின் செல்போன் எண்களை வைத்து அவரது இருப்பிடத்தை ஆய்வு செய்தபோது, அந்த நபர் கேரளா நோக்கி சென்று கொண்டிருப்பது தெரியவரவே, அவரை பின் தொடர்ந்து சென்ற தமிழக போலீசார், கேரளா போலீசார் உதவியுடன் பணத்தை கொள்ளை அடித்து சென்ற நபர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தொடர்ந்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, அந்த நபர்கள் தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகா தாருகாபுரம் பகுதியை சேர்ந்த ராமர் பாண்டி மகன் கிருஷ்ணன்(30) மற்றும் செங்கோட்டை அருகே பூலாங்குடியிருப்பு பகுதியை சேர்ந்த முகமது ஷரீஃப் மகன் நஸ்ருதீன்(31) மொய்தீன் பிச்சை மகன் ரியாஸ் கான் (22), அச்சன்புதூர் இஸ்மாயில் மகன் மீரான்(31) என தெரியவந்தது.

அதனைதொடர்ந்து, அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது, ஜிந்தாமாதர் இடைகால் பகுதியில் நகை கடை ஒன்று நடத்தி வரும் நிலையில், அவரை அணுகிய கிருஷ்ணன் தனது நண்பரின் நகையானது வாசுதேவநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் அடமானத்தில் உள்ளதாகவும், அந்த நகையை திருப்ப ரூ.20 லட்சம் தேவைப்படுவதாகவும், அதை வாங்கி நீங்கள் விற்பனை செய்தால் லட்சக்கணக்கில் லாபம் பார்க்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளதும், அதனை பண ஆசையில் நம்பிய ஜிந்தா மாதர் அவசர அவசரமாக ரூ.20.77 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு கிருஷ்ணன் உடன் காரில் சென்றுள்ளார்.

இந்த நிலையில், வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைனல் வங்கி முன்பு ஜிந்தா மாதரை நிற்க சொல்லிவிட்டு இப்போம் வருகிறேன் என்று சென்ற கிருஷ்ணன் நீண்ட நேரம் ஆகியும் வராததால், அச்சமடைந்த ஜிந்தா மாதர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இலத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட கிருஷ்ணன் மீது இது போன்ற பல்வேறு புகார் உள்ளதாகவும் குறிப்பாக, சிறு வயதான கிருஷ்ணன் சமீபத்தில் தென்காசி மாவட்டம் முழுவதும் வட்டி இல்லா கடன் தருவதாக கூறி ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி ஒரு மாநாடு போல நடத்தி இரண்டு நபர்களுக்கு ரூ. 5000 வீதம் வட்டி இல்லா கடன் வழங்கி சர்ச்சைக்கு உள்ளான நிலையில், தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு பெண்ணை அழைத்து வந்து இவர் முன்னாள் அமைச்சர் கக்கன் பேத்தி எனக்கூறி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்து அவரை வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்து ஒரு சர்ச்சையை கிளப்பினார்.

இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ள நிலையில், தற்போது நகை கடைக்காரர் ஒருவரை ஏமாற்றி ரூ.20.77 லட்சம் பணத்தை பறித்து சென்ற வழக்கில் கிருஷ்ணன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டார் அவரிடம் இருந்து ரூபாய் 19 லட்சம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது
இது போல பண ஆசை வார்த்தை கூறும் நபர்களை நம்ப வேண்டாம் எனவும், இது போன்ற நபர்கள் குறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கலாம் எனவும் போலீசார் அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *