Advertisement

24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்-கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் அறிவிப்பு .

புயல் மழை வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணம் குறித்து 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்
என கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் அறிவிப்பு .

தென்காசி டிசம்பர் 14 தற்போது வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து அரபிக் கடல் நோக்கி செல்லும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்காசி திருநெல்வேலி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கன கனமழையாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் தென்காசி மாவட்டம் முழுவதும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை காலை கடையநல்லூர் நகர் பகுதியில் உள்ள பாப்பான் கால்வாய் ஓடை மற்றும் சீவலங்கால்வாய் ஆகிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கருப்பாநதி அணைக்கு வரும் உபரிநீர் முறையான அறிவிப்புடன் திறந்து விடப்பட்டுள்ளது.

ஆகவே பாப்பான்கால்வாய் ஓடைப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் விழிப்புடன் இருக்க வேண்டும் வெள்ளப்பெருக்கினை தொடர்ந்து கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் பொது மக்களுக்கு 24 மணி நேரமும் சேவை செய்ய காத்திருப்பதை உறுதி செய்திடும் வகையில் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஆணையர் திரு ரவிச்சந்திரன் பொறியாளர் முகைதீன அப்துல் காதர் சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர் மேலாளர் சண்முகவேல் ஆய்வாளர்கள் சிவா மற்றும்மாதவராஜ் குமார் வருவாய் ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் நகர் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

தென்காசி கொல்லம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆபத்தான பிளக்ஸ் பேனர்களை அகற்றியதோடு சீவலங்கால்வாய் மற்றும் பாப்பான் கால்வாய் ஓடைகளில் உள்ள செடி கொடி மற்றும் மதகுகளின் அடைப்புகளை அகற்றியதால் ஆறுகளில் வெள்ளம் சீராக செல்கிறது கடந்த காலங்களில் மதீனா நகர் பகுதியில் மழை வெள்ளத்தின் போது ஊருக்குள் வெள்ளம் வந்தடைந்தது தற்போது அது போன்று எதுவும் நடைபெறாத வண்ணம் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் நானும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி மக்களோடு மக்களாக நின்றுகளப்பணி ஆற்றி வருகிறோம்.

மேலும் நகர் பகுதியில் மழையினால் வீடுகளில் சுவர்கள் மற்றும் பாதிப்பு ஏற்பட்டால் கீழ்கண்ட எனது செல் எண் மற்றும் ஆணையர் பொறியாளர் துப்புரவு அலுவலர் மற்றும் ஆய்வாளர்களின் செல்போன் எண்களில் பேசி தீர்வு காணுங்கள் அதிக கனமழையின் காரணத்தால் ஆறு குளம் மற்றும் ஏரிகளில் நின்று செல்பி எடுப்பதையோ மின்கம்பங்களில் ஈரக்கையுடன் சென்று மின் சாதனங்கள் பொருத்துவதையோ ஆற்றின் வெள்ளத்தில் கரையோரம் குளிப்பது வேடிக்கை பார்ப்பதை பொதுமக்கள் தயவு செய்து தவிர்க்கவும்.நகராட்சி நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் பொதுமக்கள் உதவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு நகர்மன்ற தலைவரின் அன்பான வேண்டுகோள்:-
அதீத கனமழையின் காரணமாக பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். தங்களது குழந்தைகளையும் பெரியவர்களையும் கவனமாக பார்த்துக் கொள்ளவும்.மின் கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம். ஆறு கிணறு , குளங்களில் வரும் வெள்ள ம் , ” பார்த்து செல்பி rஎடுக்கவோ வீடியோ எடுக்கவோ வேண்டாம். மழை வெள்ளம் பாதிப்பு குறிப்பாக… பாப்பான் கால்வாய் சீவலங் கால்வாய் சாலாப்பேரி குளம் அட்டக்குளம் மற்றும் நகரின் உள்ள நீர் நிலைகள் அருகில் செல்லாமல் உதவி கள் நிவாரணப் பணிகள் யாருக்கும் தேவைப்பட்டாலும் தங்கள் பகுதிகளில் மழையால் ஏதேனும் பாதிப்புகள் இருப்பின் உடனடியாக நகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தலாம்

MA ஹபீபுர் ரஹ்மான்.
நகர்மன்றத்தலைவர் :
செல் :7845445678

திருA.ரவிச்சந்திரன்
ஆணையாளர்
செல்:7358398949

பொறியாளர் :
முகைதீன் அப்துல்காதர்
செல் :9443182486

திரு..பிச்சையா பாஸ்கர் சுகாதாரஅலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சிவா… மாதவராஜ் குமார்
98651 77009/ 9790173 584/8838347773

ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் மேலே குறிப்பிட்ட எண்களை அழைக்கவும்.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *