தென்காசி மாவட்டம் மதுவிலக்கு குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுவிதிமுறைகளின்படி பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்ட நான்குசக்கர மோட்டார் வாகனம் -6. மூன்றுசக்கர மோட்டார் வாகனம் -2, இருசக்கர மோட்டார் வாகனங்கள் -107 என மொத்தம் 115 மோட்டார் வாகனங்கள் 07.01.2025 ஆம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை தென்காசி இரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் வைத்து பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது.

பொதுஏலத்தில் கலந்து கொள்ளவிருப்பம் உள்ளவர்கள் மேற்படிவளாகத்தில் 04.01.2025 ஆம் தேதிமுதல் 06.01.2025 தேதி வரையிலான நாள்களில் காலை 10.00 மணிமுதல் மாலை 05.00 மணி வரை வாகனங்களை நேரில் பார்வையிட்டு கொள்ளலாம். மேலும் தங்களின் பெயர். முகவரி அடங்கிய அடையாளஅட்டை (ஆதார். ஓட்டுநர் உரிமம்) நகலுடன் ரூபாய் 5,000/- முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் அன்றையதினமே ஏலத்தெகையுடன் ஜி.எஸ்.டி தொகையினையும் உடனடியாக அரசுக்கு செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்ல வேண்டும். இத்தகவலை தென்காசி மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் BE. அவர்கள் தெரிவித்துள்ளார்.
Leave a Reply