நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடை பெற்று வருகின்றன. பெரும்பா லான பணிகள் முடிவுற்ற நிலையில் பாவூர்சத்திரத்தில் ரெயில்வே மேம்பால பணிகள் தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தண்டவாள பகுதிக்கு மேல் பகுதியில் ரெயில்வே சார்பில் அமைக்கப்படும் பாலப்பணி கள் தொடங்க உள்ளதால், வருகிற 20ந் தேதி முதல் தென்காசியில் இருந்து ஆலங்குளம், நெல்லை செல்லும் கனரக வாகனங்கள் ஆசாத் நகர், கடையம், ஆலங்குளம் வழியாக நெல்லை செல்லுமாறும், நெல்லையில் இருந்து வரும் கனரக வாகனங்கள் ஆலங்குளத்தை அடுத்துள்ள அத்தியூத்து, சுரண்டை, இலத்தூர் விலக்கு வழியாக தென்காசி மற்றும் செங்கோட்டை செல்லு மாறும் தெரிவிக்கப்பட்டுள் ளது.
தென்காசி நோக்கி செல்லும் இலகுரக வாக னங்கள் மற்றும் அரசு பஸ்கள் மட்டும் ரெயில்வே கடவு வழியே செல்ல வேண்டும். நெல்லை நோக்கி செல்லும் மற்ற இலகுரக வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள் செல்வ விநாயகர்புரம் வடக்கு பிரிவு சாலையில் சென்று ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக மேலப்பாவூர் சாலையின் வாயிலாக பிர தான சாலையில் இணைக்கும் மாற்று பாதையில் செல்லுமாறும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் எந்த சாலை வழியாக செல்ல வேண்டும் என்கிற குழப்பம் அடையாமல் இருப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு பலகை கள் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன
Leave a Reply