Advertisement

15 நிமிடத்தில் காணாமல் போன செல்போன் கண்டுபிடிப்பு – கடையநல்லூர் போலிசார் சாதனை

15 நிமிடத்தில் ரூபாய் 20,000 மதிப்புள்ள காணாமல் போன செல்போன் கண்டுபிடிப்பு

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கோபால சுவாமி கோவில் தெருவை சேர்ந்த
முத்துசாமி மகள்அனுசியா வயது 20 அரசு கலை அறிவியல் கல்லூரி படித்து வருகிறார் சம்பவத்தன்று கடையநல்லூர் பஜார் சாலையில் மாணவியின் 20,000 ரூ மதிப்புள்ள செல்போனை தவற விட்டார்.


இது குறித்து கடையநல்லூர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி புகார் கொடுத்ததை தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் காவலர் சங்கர் ஆகியோர் டவர் லொகேஷன் பார்த்தபொழுது அந்த செல்போன் கடையநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருப்பது தெரிய வந்தது உடனடியாக போலீசார் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை செய்ததில் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் செல்போனை எடுத்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த செல்போனை முதியவரிடம் இருந்து பெற்றுக்கொண்டு கல்லூரி மாணவியிடம் கடையநல்லூர் போலீசார் ஒப்படைத்தனர்
செல்போனை தவறவிட்ட 15 நிமிடங்களில் அதனை கண்டுபிடித்தது கொடுத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினார்.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *