தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இக்பால் நகர் மாவடிக்கால் ரயில்வே கேட் இடையே மாலை செங்கோட்டையில் இருந்து சென்னை சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் இரயிலில் வாலிபர் அடிபட்டுக் கிடப்பதாக கடையநல்லூர் போலீசார் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் கடையநல்லூர் போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்ட விசாரணை செய்ததில் ரயிலில் அடிபட்டது கடையநல்லூர் மாவடிக்கால் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருணாச்சலம் மகன் பாலசுப்பிரமணியன் வயது 50 இவருக்கு திருமணம் ஆகவில்லை இவருடைய தாய் தந்தை மரணம் அடைந்த நிலையில் கேரளாவில் கூலி வேலை பார்த்து வருகிறார்.
இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்தது கொண்டது தெரியவந்தது உடனடியாக ரயில்வே போலீசார் பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Leave a Reply