தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ரெட்டியார்பட்டி நடுத்தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் செல்வம் (45). தேநீர் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் (பிப் 14) இரவு பைக்கில் ரெட்டியார்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் வழியாக பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து அவர் மீது மோதியதாம். இதில் செல்வம் இறந்தார்.
இதையடுத்து, அப்பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் பேரிக்காடுகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர. இதனால் ராஜபாளையம் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சங்கரன்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவழகன், கரிவலம்வந்த நல்லூர் காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Leave a Reply