Advertisement

இலஞ்சி குமாரர் கோவில் பகுதியில் நெகிழி சேகரித்தல்

தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட இலஞ்சி குமாரர் கோயில் பகுதிகளில் நெகிழிகளை சேகரித்தல் மற்றும் பேரூராட்சிப் பணியாளர்களால் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் நெகிழி குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியில் பள்ளி மாணவர், மாணவிகள் கலந்துகொண்டு நெகிழி குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்துகொண்டனர்.பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஐ. சி. ஈஸ்வரன் பிள்ளை தொடக்கப் பள்ளியல் முடிவடைந்தது.

தொடர்ந்து, மாணவர், மாணவிகளுக்கு நெகிழி குறித்து விழிப்புணர்வு வழங்கி நெகிழி பொருள்கள் சேகரிக்கப்பட்டது. தென்காசி மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் எம். நெல்லைமதி, இலஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் செ. குமார் பாண்டியன், பேரூராட்சிமன்றத் தலைவர் ச. சின்னத்தாய், துணைத் தலைவர் மு. முத்தையா பாண்டியன், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் தமிழ்செல்வன், சண்முக ஸ்ரீ ரேவதி, முதல்வர் பசுமை படை அசோசியேட் ஞானஸ்ரீபவானி, பள்ளி தலைமையாசிரியர்கள், பசுமை படை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *