தென்காசி அரசு மருத்துவமனையில் ஆயிரப்பேரியைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறி பொதுமக்கள் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்…
இது தொடர்பாக தென்காசி அரசு தலைமை மருத்துவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனையில் இறந்த குழந்தைக்கு கடந்த புதன்கிழமை அன்று 1.5 வயது நிறைவடைந்ததும் வழக்கமாக செலுத்தும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதன் பின் குழந்தைக்கு காய்ச்சல் மூன்று தினங்களாக இருந்த நிலையில் குழந்தையின் பெற்றோர் ஒரு சில சிகிச்சையை செய்துள்ளனர் எனினும் காய்ச்சல் சரி ஆகாத நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு குழந்தையை அழைத்துச் சென்றபோது குழந்தை பரிசோதித்த மருத்துவர் குழந்தையின் நிலைமை மிக மோசமாக உள்ளது மூளைக்காய்ச்சலுக்கு உண்டான அறிகுறி உள்ளது.
உடனடியாக நீங்கள் அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என கூறி அவரே அரசு மருத்துவமனைக்கும் ஒரு குழந்தை தீவிர பாதிப்புடன் வருகிறது குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை தேவை அதற்குண்டான ஏற்பாடுகளை செய்யுங்கள் என தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
குழந்தை சரியாக 8.27 மணிக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் மருத்துவர்கள் சிகிச்சை வேகமாக தொடங்கியுள்ளனர் எனினும் குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் 8.55 மணிக்கு உயிரிழந்துள்ளது.. ஆகவே அரசு மருத்துவமனை மீது எந்த தவறும் இல்லை குழந்தைக்கு எந்த அளவு உரிய சிகிச்சை அளிக்க முடியுமோ அந்த அளவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது எனினும் துரதிஷ்டவசமாக குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளது வருத்தத்துக்குரியது என அரசு தலைமை மருத்துவமனை சார்பில் விளக்கம்.
Leave a Reply