Advertisement

கடையநல்லூர் அருகே கோழிப்பண்ணை பெயரில் பட்டாசு தயாரிப்பு குடோன்

கடையநல்லூர் அருகே ஊர் மேல் அழகியான் அருகே காட்டுப்பகுதிக்குள் கோழிப்பண்ணை என்ற பெயரில் சட்டவிரோதமான பட்டாசு வெடி தயாரிப்பு குடோன் கண்டுபிடிப்பு குடோனுக்கு சீல் வைப்பு

கடையநல்லூர் அருகே ஊர் மேல் அழகியான்  கிராமத்துக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் பூபதிராஜன் என்பவரின் கோழிப்பண்ணை உள்ளது இந்தப் பண்ணையில் சட்டவிரோதமாக சிவகாசியிலிருந்து ஏராளமான வெடி மருந்துகளை வாங்கி வந்து அரசுக்கு தெரியாமல் வெடிபொருள் தொழிற்சாலைக்கான உரிமம் இல்லாமல் பட்டாசு தொழிற்சாலை  நடத்தப்பட்டு வந்துள்ளது.

அந்த தொழிற்சாலையில்  சரவெடி, அணுகுண்டு ,ராக்கெட் வெடி, போன்றவற்றை அப்பகுதியில் உள்ள கூலித் தொழிலாளிகளை வைத்து தயாரித்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது

சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந், மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் ஆகியோரின் உத்தரவின்படி கோட்டாட்சியர் லாவன்யா கடையநல்லூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன், தென்காசி டிஎஸ்பி தமிழ் இனியன், இன்ஸ்பெக்டர் கவிதா,  கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா  ஆகியோர் சம்பந்தப்பட்ட சட்ட  விரோதமாக  வெடி தயாரித்த  கோழிப் பண்ணையை பார்வையிட்டு சீல் வைத்தனர்.

அதிக அளவு வெயில் அடிப்பதால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க. கோழி பண்ணை சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு  பொதுமக்கள் செல்லாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .

சிவகாசியில் இருந்து வெடி மருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் வெடி மருந்துகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் காவல்துறை தீயணைப்புத்துறை வருவாய்த் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *