Advertisement

புளியங்குடியில் 15ஆயிரம் லஞ்சம் வாங்கியவர் கைது

சொத்து வரி நிர்ணயிக்க
ரூ.15 ஆயிரம் லஞ்சம்
வருவாய் உதவியாளர் கைது!

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் சொத்து வரி நிர்ணயம் செய்ய சொத்து வரி நிர்ணயிக்க
ரூ.15 ஆயிரம் லஞ்சம்
வருவாய் உதவியாளர் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி காளிராஜன் என்பவர் புளியங்குடி நகராட்சி பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். மேற்படி வீட்டிற்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக விசாரித்தபோது அவர்கள் முதலில் காலிமனை தீர்வை கட்ட சொல்லி அதற்கு விண்ணப்பிக்கும்படி கூறியுள்ளவர், அதன் பின்னர் , புதிதாக கட்டிய வீட்டிற்கு சொத்துவரி நிர்ணயம் செய்வதற்காக புளியங்குடி நகராட்சியை சேர்ந்த வருவாய் உதவியாளர் அகமது உமர் புகார்தாரரின் வீட்டை சென்று பார்த்து அளந்து அளவீடு எடுத்து விட்டு புகார்தாரரை அலுவலகத்திற்கு வரச் சொல்லி, வருவாய் உதவியாளர் அகமது உமர் சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூ.20,000/- தனக்கு தனியாக கொடுத்தால்தான் சொத்துவரி நிர்ணயம் செய்து ரசீது வாங்கி தருவேன் என்று கூறியுள்ளார். அதற்கு புகார்தாரர் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதால் பணம் கொண்டு வந்தால்தான் சொத்துவரி நிர்ணயம் செய்து ஏசீது வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று கட்டாயமாக சொல்லிவிட்டதால், லஞ்சமாக ரூ. 15,000/- கொடுக்க விருப்பம் இல்லாத காளிராஜ்ன் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புளியங்குடி நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து இன்று ரசாயனப் பவுடர் தடவிய பணத்தை நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமர் பெற்றுக்கொண்டபோது அங்கு மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பால் சுந்தர். தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்திருந்து கையும் களவுமாக உமரை பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர் இதனால் புளியங்குடி நகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *