Advertisement

கடையநல்லூரிலிருந்து பிரிந்து செங்கோட்டையுடன் இணைந்தது அச்சன்புதூர் பேருராட்சி

 

செங்கோட்டை தாலுகாவுடன் அச்சன்புதூர் பேரூராட்சி இணைப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவில் இடம்பெற்று இருந்த அச்சன்புதூர் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளும் செங்கோட்டை தாலுகாவில் இணைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள அரசாணை எண் 556 நாள் 18- 12 -2024 கூறியிருப்பது;

முன்பு செங்கோட்டை தாலுகாவில் அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 1 மற்றும் இரண்டாவது வார்டுகள் இடம் பெற்றிருந்தன. 3 முதல் 15 வது வார்டுகள் வரை கடையநல்லூர் தாலுகாவில் இடம்பெற்றிருந்தன. இப்படி அச்சன்புதூர் பேரூராட்சி எல்லையானது செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களில் பரவி இருப்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மற்றும் நிர்வாக வசதிகளை ஆய்வு செய்து அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளையும் செங்கோட்டை தால்காவுடன் இணைப்பது தொடர்பான கருத்துருவை தென்காசி மாவட்ட ஆட்சியர் அனுப்பி இருந்தார்.

அதன்படி,
தற்போது நிர்வாக வசதிக்காக அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 15 வது வார்டு வரை அனைத்தும் செங்கோட்டை தாலுகாவில் இணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் செங்கோட்டை தால்காவில் உள்ள இலத்தூர் குறுவட்டத்துடன் இணைக்கப்படும். இவ்வாறு அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *