Advertisement

கடையநல்லூரில் கல்லூரி மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

 

கடையநல்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பேரணி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர். பா. விக்டோரியா தங்கம் தலைமை தாங்கினார். ஆங்கிலத் துறைத்தலைவர் முனைவர் ராம்சங்கர் முன்னிலை வகித்தார்.

போதைப்பொருள் எதிர்ப்பு மன்ற உறுப்பினர் கணிதவியல் துறை பேராசிரியர் கு.ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலால் உதவி ஆணையர் ராமச்சந்திரன் , கடையநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியயை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள்.

கல்லூரியின் முதல்வர் மாணவர்களுக்கு கஞ்சா, மது, சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், அதன் மூலம் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்னைகள் பற்றி மாணவரிடம் எடுத்துரைத்தார். தொடர்ந்து மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். கடையநல்லூர் நகர் முழுவதும் முக்கிய வீதி வழியாக சென்று போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி புதிய பேருந்து நிலையம் நிலையத்தில் நிறைவு செய்தனர்.

அங்கு பொதுமக்களுக்கு மாணவர்கள் கலை நிகழ்ச்சி மதுபானால் குடும்பம் எவ்வாறு சீரழிகிறது என்பது உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் நடத்திக் காட்டினார் .
இதில் சமூக நலம் பெண்கள் உரிமை துறை மைய நிர்வாகி ஜெயராணி சிறப்புரையாற்றினார். இறுதியில் போதை எதிர்ப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் பாபுராஜ் இணை ஒருங்கிணைப்பாளர் அனுராதா ஆகியோர் நன்றியுரை கூறினார்.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *