தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பெரிய தெருவில் வேகமாக வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கடையநல்லூரில் 20க்கும் மேற்பட்ட ஆட்டோ நிறுத்தங்களின் மூலம் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்னர் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ஆடிவேல், பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து ஆட்டோக்களுக்கும் பாதுகாப்பு தனிப்பட்ட எண் குறியீடு வழங்கி இருந்தார். மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் கடையநல்லூர் பெரிய தெருவில் பயணிகள் இல்லாத ஆட்டோ வேகமாக சென்று கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கடையநல்லூர் நகர பகுதியில் ஏராளமான சிறிய அளவிலான தெருக்கள் சந்துக்களும் உள்ள நிலையில் இதுபோன்று வேகமாக ஓட்டப்படும் ஆட்டோகளால் பெரும் ஆபத்து நிலழ்கின்றதென பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் இதுகுறித்து போதிய விழிப்புணர்வை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply