Advertisement

கடையநல்லூரில் பைக் விபத்தில் ஒருவர் பலி

கடையநல்லூர் மின்வாரியம் அருகே மஹ்மூதா நகரில் வசித்தவர் லியாகத் அலி (வயது 68). இவர் நேற்று மதியம் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு கடையநல்லூரில் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலை யில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கடைய நல்லூர் கிருஷ்ணாபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் அஜய் (18) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு லியாகத் அலிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தென்காசி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லியாகத் அலி பரிதாபமாக இறந்தார். அஜய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த லியாகத் அலிக்கு மனைவி மற்றும் ஒரு மகள், 4 மகன்கள் உள்ளனர்

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *