தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் புளியங்குடியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புளியங்குடி ஈபி ஆபீஸ் எதிர்ப்புறம்உள்ள திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் பாலகுருநாதன் முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் அருள் செல்வன் முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ராமநாதன் முன்னாள் மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

புளியங்குடி நகரத் தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மாவட்டத் தலைவர்கள் பாண்டுரங்கன் சரவணத்துரை தமிழ்செல்வன் முத்து பலவேசம் சரவணா கிருஷ்ணன் சித்ராந்தகன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது,
தென்காசி மாவட்டம் புலித்தேவன் ஒண்டிவீரன் வெண்ணி காலாடி மற்றும் வாஞ்சிநாதன் பாரதியார் போன்றவர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும். தேசியவாதிகள் நிறைந்த மண் தென்காசி மண்.தற்போது இந்த மாவட்டத்தில் கனிமக் கொள்ளை நடந்து வருகிறது. திமுக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் ஊழல் தலை விரித்து ஆடுகிறது. இந்த ஆட்சியால் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெரிய கேடு ஏற்பட்டுள்ளது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எங்கு சென்றாலும் தமிழ் மொழியின் பெருமையையும் கலாச்சாரத்தையும் சிறப்பையும் பேசி வருகிறார் தமிழ் மொழி மீதும் தமிழக மக்கள் மீதும் அலாதியான அன்பும் மரியாதையும் வைத்துள்ளார்.

ஆசிரியர்கள் மிகவும் கண்ணியத்திற்கு உரியவர்கள். ஆனால் இன்று தமிழகத்தில் 238 ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி டிஸ்மி செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கல்வித்தரம் மிகவும் அதல பாதாளத்தில் உள்ளது. இன்று ஆட்சியில் உள்ளவர்கள் குடும்பத்தினர் ஹிந்தி கற்பிக்கின்ற பள்ளியில் படிக்கின்றனர் ஹிந்தி கற்பிக்கும் பள்ளிகளை நடத்துகின்றனர். இந்த அரசு ஹிந்தி மொழியை திணிப்பதாக பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையயும் தேசிய கல்விக் கொள்கையையும் ஏற்க மறுக்கின்றனர் .

கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அருமையான திட்டங்களை ஏற்க மறுக்கின்றனர். தாய்மொழி தமிழ் மொழிக்கு எந்த முக்கியத்துவமும் குறையாது விருப்ப மொழியாக இரண்டாவது மூன்றாவது மொழியாக விருப்பமுள்ளவர்கள் ஹிந்தி ஆங்கிலம் கற்கலாம் என்பதுதான் உண்மை . இதை மறைத்து திமுக அரசு பொய்ப் பிரச்சாரம் செய்து பூமொழிக்கொள்கையை எதிர்த்து கல்வி தரத்தை மேலும் குறைப்பதற்கு முயன்று வருகின்றனர்.

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கத்தை துவங்கியுள்ளோம் மே மாதம் இறுதிக்குள் ஒரு கோடி கையெழுத்துக்களை பெற்று ஜனாதிபதியிடம் மனுவாக அளிக்க உள்ளோம் தரமான கல்வி மட்டும் தான் தமிழக மக்களை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்லும்.

தமிழகத்தில் ஒரு நவோதயா பள்ளிக்கூட இயங்கவில்லை என்பது வேதனைக்குரியது. நவோதயா பள்ளிகள் விவசாய குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்காக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்காக மிக உயர்ந்த கல்வி தரம் உடன் கூடிய தனியார் பள்ளிகளுக்கு இணையான பள்ளியாக உள்ளது. இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று மிகப் பெரிய பதவிகளில் உள்ளனர் ஆனால் அதை தமிழகத்தில் வரவிடாமல் செய்தது திமுக அரசு. 2026 பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் பொழுது நவோதயா பள்ளிகள் மீண்டும் அமைக்கப்படும் வேண்டுமானால் கர்மவீரர் காமராஜர் பெயரில் அந்த பள்ளிகளை இயக்க நாங்கள் தயாராக உள்ளோம் .

திமுக தனது தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும் பெண்களுக்கான உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2026 இல் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் பொழுது ரூபாய் 2500 க்கும் மேலான ஒரு தொகை தமிழக பெண்களுக்கு உரிமை தொகையாக வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

புளியங்குடியில் முக்கியமான விவசாயப் பயிரான எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மொழி திணிப்பு என்பது கிடையாது. மும்மொழி கொள்கை மூலம் தமிழக மாணவர்கள் சிறந்த அறிவாற்றலுடன் இந்தியாவிலும் சரி வெளிநாடுகளில் சரி உலகத்தில் எந்த மூலையில் வேண்டுமானாலும் வேலை பார்க்கக்கூடிய ஒரு தகுதியுடன் இருப்பார்கள் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மக்கள் விரோத ஆட்சியை 2026 இல் தோற்கடித்து தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி அமைவதற்கு நாம் இன்றே சம்மதம் ஏற்போம்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார். கூட்டம் முடிவில் கடையநல்லூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி தலைவர் தர்மர் நன்றி கூறினார்.
Leave a Reply