Advertisement

சிவகிரியில் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற தாய்,மகள் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி குமரேசபுரம் பகுதியை சேர்ந்த 50 வயதானவர் செல்வி இவரது மகன் வெளி மாநிலத்தில் வேலை செய்து வருகிறார். செல்வியும் சொக்கநாதன் புதூரை சேர்ந்த 50 வயதான பூமாரி என்பவரும் சிறுவயதில் ஒன்றாக சொக்கநாதன் புதூர் அரசு பள்ளியில் படித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பூமாரி நான் உன்னை சந்திக்க வீட்டிற்கு வருவதாக கூறி, 27.05.2025 அன்று இரவு 08.00 மணி அளவில் பூமாரி மற்றும் அவரது 19 வயது மகளான மதுமிதா ஆகியோர் அக்கம் பக்கத்தை நோட்டமிட்டு தனியாக இருப்பதை அறிந்து செல்வியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

பின்பு வீட்டின் உள்பக்கமாக கதவை பூட்டிவிட்டு செல்வியின் வாயைப் பொத்தி கழுத்தில் கிடந்த தங்க செயின் மற்றும் காதில் இருந்த கம்மலை கழற்றி சென்றுள்ளனர். இது குறித்து செல்வி சிவகிரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து மேற்படி தங்கச் செயின் மற்றும் கம்மலை பறித்து தப்பி ஓடிய தற்போது திருப்பூர் மாவட்டம் வீரபாண்டியில் குடியிருந்து வரும் பாலமுருகன் என்பவரின் மனைவி பூமாரி (50) மற்றும் அவரது மகளான மதுமிதா (19) ஆகிய இருவரையும் 24 மணி நேரத்திற்குள் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து பரித்து செல்லப்பட்ட தங்கச் சங்கிலி மற்றும் கம்மல், பயன்படுத்தி வந்த செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *