கடையநல்லூர் அருகே
கோழிப்பண்ணையில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட பட்டாசு தயாரித்த மூன்று பேர் கைது
மூன்று பேருக்கு போலீஸ் வலை வீச்சு
கடையநல்லூர் அருகே காட்டுப்பகுதியில் கோழிப்பண்ணை பெயரில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். பின்னர் அந்த குடோனை பூட்டி ‘சில்’ வைத்தனர்.
கடையநல்லூர் அருகே ஊர் மேல் அழகியான் காட்டுப்பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பதாக சாம்பவர் வடகரை தனிப்பிரிவு காவலர் ஸ்ரீதர் ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து அவர் மாறுவேடத்தில் சென்று பட்டாசு தயாரிப்பதை கண்டுபிடித்து மாவட்டபோலீஸ் ரூப்பிரண்டு அரவிந் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்
இதையடுத்து தென்காசி உதவி கலெகடர் லாவண்யா. கடையநல்லூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன், தென்காசி துணை – போலீஸ் சூப்பிரண்டு தமிழ் இனியன் இன்ஸ்பெக்டர் கவிதா, கடையநல்லூர் தீய ணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா ஆகியோர் நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அதிகாரிகள் உள்ளே சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு கோழித்தீவன மூட்டைகளுடன் கோழிப்பண்ணை செயல்பட்டது தெரியவந்தது அந்த கோழி பண்ணையில் கோழிகள் இல்லாத நேரத்தில் அவ்வப்போது பட்டாசு தயாரிப்பதும் அதுபோன்று அருகில் உள்ள மற்றொரு இடமான தும்பு மில்லிலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது .
தும்பை மில்லை கடையநல்லூர் அருகே உள்ள பால மார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் செல்வகுமார் என்பவர் சிவகாசியைச் சேர்ந்த முத்து மாரியப்பன் என்பவருக்கும் அதேபோன்று ஊர் மேல் அழகியான் கிராமத்தைச் சேர்ந்த பூபதி ராஜன் என்பவர் சிவகாசியை சேர்ந்த ஸ்ரீநாத் குமார் என்பவருக்கு லீசுக்கு கொடுத்திருந்தார் என்பது தெரியவந்தது
இதில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஏராளமான வெடி மருந்துகளை வாங்கி வந்து சட்டவிரோதமாக உரிமம் இல்லாமல், கோழிப் பண்ணை என்ற பெயரில் பெயரிலும் தும்பை மில் என்ற பெயரிலும் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்தது தெரியவந்தது. அங்குசரவெடி அணுகுண்டு. ராக்கெட் வெடி, போன்ற வற்றை அப்பகுதியில் உள்ள கூலித் தொழிலாளிகளை வைத்து தயாரித்து விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக் கப்பட்டது.
இதுதொடர்பாக சாம்பவர் வடகரை உதவி ஆய்வாளர் திரு சதீஷ் மற்றும் திரு சீதாராமன் அவர்கள் வழக்கு பதிவு செய்துகோழிப்பண்ணையை லீசுக்கு விட்ட ஊர் மேல் அழகியானை சேர்ந்த சேர்ந்த பூபதி ராஜன் தும்பை மில்லை லீசுக்கு விட்ட செல்வகுமார் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட தொழிலாளி இருவர்கள் ,மற்றும் லீசுக்கு எடுத்த சிவகாசியை சேர்ந்த ஸ்ரீநாத் குமார், முத்துமாரியம்மன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து செல்வகுமார் மற்றும் தொழிலாளி இருவரையும் சிறையில் அடைத்தனர் மற்ற நபர்களை காவல்துறை தேடி வருகின்றனர் .
Leave a Reply