தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை கோவிலில் ஒரு பர்ஸ் அனாதையாக கிடந்தது. அதை சாமி கும்பிடச் சென்ற புளியங்குடி சிந்தாமணியை சேர்ந்த கடற்கரை என்பவர் எடுத்து திறந்து பார்த்தார். அப்போது அந்த பர்சில் ஒரு செயின் ஒரு கைச்செயின் இரண்டு ரிங் மொத்தம் 20 கிராம் மதிப்புள்ள தங்க ஆபரணம் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த பர்சை கடற்கரை அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். தங்கப்பொருளுடன் கிடந்த பர்சை மீட்டு நேர்மையாக ஒப்படைத்த கடற்கரையை போலீசார் பாராட்டினர். மேலும் கோவிலில் நகையை தவறவிட்ட நபர் அச்சன்புதூர் போலீஸ் நிலையம் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நகையை தவறவிட்டது கல்லிடைக்குறிச்சி இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மனைவி சிவச்செல்வி என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிவச்செல்வி தவறவிட்ட நகையை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் சிவச்செல்வி இடம் நகையை ஒப்படைத்தார்
Leave a Reply