வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் மற்றும் இயந்திரன் எட்ஜ் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் தேர்வு.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள வீரசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் மே 25-ஆம் தேதி, வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் ஆனந்தன் அய்யாசாமி, ஹைதராபாத் மையமாகக் கொண்ட கிரேடியஸ் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் கங்காதரன் மற்றும் தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்ட இயந்திரன் எட்ஜ் பிரைவேட் லிமிடெட் காருண்யா குணவதி அவர்கள் ஏற்பாட்டில் தகவல்தொழில்நுட்ப துறையினரை நோக்கமாகக் கொண்டு வேலைவாய்ப்பு முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது.
முகாமில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 70 பேர் பங்கேற்றனர். அவர்களில் 3 பேருக்கு பணி நியமன ஆணை கொடுக்கப்பட்டது. பயிற்சி காலத்தில் மாத ஊதியம் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும் எனவும், நிரந்தர பணிக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வரை ஊதியம் நிர்ணயிக்கப்படலாம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனந்தன் அய்யாசாமி பேசும்போது, “கிராமப்புற மாணவர்கள் உலகளாவிய வேலை வாய்ப்புகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார். நகர்ப்புற வேலை வாய்ப்புகளை, தென்காசி போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு கொண்டு வருவதில் பெருமை அடைவதாக காருண்யா குணவதி கூறினார். தென்காசி பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் மண்ணின் மைந்தராக பெருமை அடைவதாக கங்காதரன் கூறினார்.
இந்நிகழ்வின் மூலம் தென்காசி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு புதிய வழிதிறக்கும் வாய்ப்புகளை உருவாக்கி, மாவட்ட வளர்ச்சியில் ஒரு படிகட்டாக வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் மற்றும் இயந்திரன் எட்ஜ் இயங்கியமை பாராட்டுதற்குரியது.
—
Leave a Reply