Advertisement

சங்கரன்கோவில் அருகே ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து ஒருவர் தற்கொலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை 5-ம் தெருவை சேர்ந்தவர் சின்னச்சாமி மகன் சங்கர மகாலிங்கம் (59) சங்கர மகாலிங்கத்திற்கு கோமதி என்ற மனைவியும், ரூபா என்ற பெண்ணும் உள்ளனர். ரூபாவிற்கு திருமணம் முடிந்து கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். சங்கர மகாலிங்கம் டி.பார்ம் முடித்துவிட்டு கோயம்புத்தூர் மாவட்டம் பல்லடத்தில் மெடிக்கல் ஷாப் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பல்லடத்தில் இருந்த மெடிக்கல் ஷாப் தொழில் நஷ்டம் அடைந்து மெடிக்கல் ஷாப்பை அடைத்து மூடிவிட்டு கடந்த 10 நாட்களாக சங்கர மகாலிங்கத்தின் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு வந்துள்ளார்.

மேலும் அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சங்கர மகாலிங்கம் நேற்று இரவு மயிலாடுதுறை செங்கோட்டை பயணிகள் ரயில் வண்டியில் சங்கரன்கோவிலில் பாம்பு கோயில் சந்தை செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் கிடைத்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் மருந்து கடை உரிமையாளர் சங்கர மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சங்கர மகாலிங்கத்தின் மனைவி கோமதி கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *