சபரிமலை சிறப்பு ரயில் “கடையநல்லூர்” ரயில் நிலையத்தில் நின்று செல்லுமா..??
எம்பி, எம்எல்ஏ தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை மனு அளிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தல்.
வரும் 19ம் தேதி முதல் இயக்கப்படும், ரயில் எண். 07175/07176, செகந்திராபாத் – கொல்லம் – செகந்திராபாத் சபரிமலை சிறப்பு ரயில் “கடையநல்லூர்” ரயில் நிலையத்தில் நின்று செல்ல தென்காசி எம்பி மற்றும் கடையநல்லூர் எம்எல்ஏ ஆகியோர் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை மனு அளிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கடையநல்லூர் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் பட்சத்தில் சபரிமலை, கொல்லம் மற்றும் திருவண்ணாமலை, திருப்பதி, ஹைதராபாத் செல்ல ரயில் பயணிகள் மிகவும் பயனடைவார்கள்.
நேற்று சங்கரன்கோவில் எம்எல்ஏவின் கோரிக்கையை ஏற்று பரிசீலித்து சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply