Advertisement

ஐந்து வருடங்களாக கிடப்பில் கிடக்கும் காவலர் குடியிருப்பு கட்டிடம். பதில் கடிதம் மட்டுமே கிடைக்கிறது…! தீர்வு எப்போது?? சமூக ஆர்வலர்கள் கேள்வி

வணக்கம்.(ஆபத்தான நிலையில் உள்ள காவலர்கள் குடியிருப்பு கட்டிடத்தை இடித்து புதிய காவலர்கள் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டிதர கோரிக்கை) தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதியில் வாசுதேவநல்லூர் காவல் நிலையம் அருகில் காவலர்கள் குடியிருப்பு கட்டிடம் ஆறு அறைகள் கொண்ட குடியிருப்பு கட்டிடமாக சில வருடங்களுக்கு முன்பு செயல்பட்டு வந்தது.

பின்னர் குடியிருப்பு கட்டிடம் ஆங்காங்கே சேதமடைந்து வசிக்க முடியாத கட்டிடமாக கடந்த 5-வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லாமல் மிகவும் ஆபத்தான நிலையில் சிதிலமடைந்து காணப்படுகிறது. ஆபத்தான நிலையில் உள்ள காவலர்கள் குடியிருப்பு கட்டிடத்தை உடனடியாக இடித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையம் காவலர்களுக்கு புதிய குடியிருப்பு கட்டிடங்கள் கட்டித்தர வாசுதேவநல்லூர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்,காவலர்கள் சார்பாக இந்த கோரிக்கை மனு பதிவு செய்கிறோம்.

நன்றி அரசு ஆணைகள் எண்:,66,80,114,99,73 மற்றும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எண்:W.P.NO.20527 OF 2014,dated 01-08-2014 ன் படி. இம்மனுவை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் சீட்டு மற்றும் மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கடிதம் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனி ஒருவன் சுரேஷ் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *