Advertisement

தனக்கு மாரடைப்பு வந்த போதிலும் பயணிகளின் உயிரை காப்பாற்றி உயிரை விட்ட ஓட்டுனர்

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் ஓடும் அரசு பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்ட ஓட்டுநர் பத்திரமாக வண்டியை நிறுத்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

புளியங்குடியில் இருந்து நேற்று காலை 5 மணி அளவில் நாகர்கோவிலுக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது.

இந்த பேருந்தை புளியங்குடியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஓட்டுனராக ஒட்டி சென்றார்.

இந்த அரசு பேருந்து ஏர்வாடி பேருந்து நிலையத்தில் ஆட்களை இறக்கி ஏற்றிவிட்டு தெற்கு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று ஓட்டுநர் மாரியப்பனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனே பேருந்தை பிரேக் போட்டு ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையில் மாரியப்பன் சாய்ந்துள்ளார்.

உடனே அக்கம் பக்கத்தினர் பேருந்தில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக ஆட்டோவில் ஏற்றி ஏர்வாடியுள்ள தனியார் ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

ஓடும் பஸ்ஸில் 52 பயணிகளை எந்தவித பாதிப்பும் இல்லாமல் பேருந்தை பத்திரமாக நிறுத்தி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *