Advertisement

புளியங்குடி மகளிர் காவல் நிலையத்திற்கு தனி கட்டிடம் கட்ட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தென்காசி மாவட்ட காவல்துறையில் ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், தென்காசி என 4 உட்கோட்டங்கள் உள்ளன. ஒரு உட்கோட்டத்துக்கு ஒரு மகளிர் காவல் நிலையம் என்ற அடிப்படையில் 4 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இவற்றில் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் புளியங்குடி காவல் நிலையத்தின் மாடியில் செயல்பட்டு வருகிறது. புளியங்குடி காவல் நிலையம் 16 பெரிய கிராமங் களை உள்ளடக்கியது. சிவகிரி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், சொக்கம்பட்டி, சேர்ந்தமரம், புளியங்குடி காவல் நிலையபகுதிகளை உள்ளடக்கிய அனைத்து மகளிர் காவல் நிலையமும் இங்கு ஒரே இடத்தில் செயல்பட்டு வருவதால் கடும் இட நெருக்கடி நிலவுகிறது.

புளியங்குடியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை தனியாக கட்டிடம் கட்டப்படவில்லை. இட நெருக்கடியால் காவல்துறை யினரும், காவல் நிலையத்துக்கு வரும் பொது மக்களும் சிரமத்துக்கு இதற்கு தீர்வு காண புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தனி கட்டிடம் கட்ட வேண்டும் என காவல் துறையினரும், சமூக ஆர்வலர்களும் எதிர் பார்க்கின்றனர்.

வாசுதேவநல்லூரை சார்ந்த சமூக செயற்பாட்டாளர் தனி ஒருவன் சுரேஷ் முதல்வரின் தனிப்பிரிவிற்கு  மனு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *