தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரையில் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையே நிலவி வரும் பிரச்சினை தொடர்பாக, ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்த நிலையில், இது தொடர்பாக கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருதரப்பைச் சேர்ந்தவர்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் உடன்பாடு ஏற்படவில்லையாம். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி, கடைகளை அடைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழினியன், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். கடைகளும் திறக்கப்பட்டன
Leave a Reply