Advertisement

சங்கரன்கோவிலில் தனியார் பள்ளி பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளி நொச்சிகுளம் கிராமத்திலிருந்து குழந்தைகளை இன்று காலையில் அப்பள்ளியின் வாகனத்திலேயே ஏற்றிக்கொண்டு சென்றனர்..

வீரசிகாமணி உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும்போதே நொச்சிகுளம் வீரசிகாமணி செல்லும் சாலையின் அருகேயிருக்கும் வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த நான்கு குழந்தைகள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையிலும் சிறு சிறு காயங்களுடன் வீரசிகாமணி மருத்துவமனையில் 2 குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே வாகனத்தில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றி செல்வதாகவும், வேகமாக செல்வதாகவும் பெற்றோர்கள் பள்ளி மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்..

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *