தென்னக ரயில்வேயின் உயரிய விருதான வசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதுக்கு நெல்லையைச் சேர்ந்த நெல்லை ரயில் நிலையத்தில் முதுநிலை பொறியாளராக இருக்கும் மந்திர மூர்த்தி தேர்வு
நெல்லை ரயில் நிலைய ரயில்களின் போக்குவரத்து ஆய்வாளர்முருகேசனுக்கும் விருது வழங்கப்படுகிறது.
திருநெல்வேலி ரயில் நிலையத்தை சேர்ந்த இருவருக்கு விருதால் நெல்லை மக்கள் மகிழ்ச்சி. தென்னக ரயில்வேயில் மிக உயரிய விருதான வசிஷ்டர் ரயில் சேவா புரஸ்கார் விருது திருநெல்வேலி ரயில் நிலையத்தில் முதுநிலை பொறியாளராக பணிபுரியும் பொறியாளர் மந்திர மூர்த்திக்கு வழங்கப்பட இருக்கிறது தென்னக ரயில்வேயில் வெற்றிகரமாக ஓடிவரும் வந்தே பாரத் ரயில்களை வெற்றிகரமாக இயக்குவதில் பெரும் பங்கு வகித்ததற்காகவும், வந்தே பாரத் ரயில்களின் இயக்கத்தை தங்கு தடையில்லாமல் இயக்கி வருவதற்காகவும் இந்த விருதுக்கு திருநெல்வேலியை சேர்ந்த பொறியாளர் மந்திர மூர்த்தி தேர்வாகி இருக்கிறார்.
இரண்டாவது முறையாக இளம் வயதில் இந்த விருதை வாங்கும் முதல் ரயில்வே ஊழியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் மந்திரமூர்த்தி. வருகிற 30-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தென்னக ரயில்வே பொது மேலாளர் இந்த விருதினை வழங்குகிறார். 32 வயதான பொறியாளர் மந்திர மூர்த்தி திருநெல்வேலியை சேர்ந்தவர். இயந்திரவியலில் டிப்ளமோ படித்த மந்திர மூர்த்தி பின்னர் BE பொறியாளர் பட்டம் பெற்றார். 2013 ஆம் ஆண்டு இந்திய ரயில்வேயின் நேரடி தேர்வு மூலம் இளநிலை பொறியாளராக பணியில் சேர்ந்த மந்திரமூர்த்தி தற்போது முதுநிலை பொறியாளராக திருநெல்வேலியில் வேலை பார்த்து வருகிறார். இதற்கு முன்பாக 2019 ஆம் ஆண்டு சிறந்த சேவைக்கான தென்னக ரயில்வே பொது மேலாளர் விருதுநகர் பெற்றவர் மந்திரமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வழங்கப்படும் விருது சிறப்பான முறையில் வந்தே பாரத் ரயில்களை தொடர்ந்து இயக்கி வருவதற்காக இவருக்கு அகில இந்திய அளவில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதே போல திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் நிலைய மேலாளராக பணிபுரிந்து தற்போது ரயில்வே போக்குவரத்து ஆய்வாளராக பணிபுரியும் முருகேசன் என்பவருக்கும் இந்த உயரிய விருது வழங்கப்பட உள்ளது. மதுரை ரயில்வே கோட்டத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு மட்டுமே இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
மந்திரமூர்த்தி மற்றும் முருகேசன் ஆகிய இருவரும் திருநெல்வேலி சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply