Advertisement

போகியில் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

தென்காசி மாவட்டத்தில் போகி பண்டிகையின் போது பழைய பொருள்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல்கிஷோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: போகி பண்டிகையின்போது பழைய பொருள்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருள்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படும். இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.

வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு, விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.எனவே, போகி பண்டிகையின்போது, பழைய பொருள்கள் எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். புகையில்லா போகி கொண்டாடுவோம், சுற்றுச்சூழலைக் காப்போம் என்றார் அவர்.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *