Advertisement

தென்காசி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

தென்காசி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

தென்காசி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொண்டாட்டங்களின் போது இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் பைக் ரேஸ் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து அவர்களின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

அதே போன்று சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் சாகசம் செய்வது, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் செல்வதும், பொது இடங்களில் நின்று மதுஅருந்திவிட்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஶ்ரீனிவாசன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்..

 

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *