Advertisement

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்றத்தில் சாட்சிகளை ஆஜர் படுத்துதல், போக்குவரத்து நெரிசல் குறைப்பது, சாலை விதிகளை மீறுவதால் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்துவது மற்றும் விரைந்து முடிக்கப்பட வேண்டிய வழக்குகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் நீதிமன்றத்தில் திறன் பட வாதாடி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்த அரசு வழக்கறிஞர்களுக்கும், கடந்த மாதம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் இயங்கு வரும் காவல்துறை அரசு வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார்.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *