Advertisement

கேரள வனப்பகுதியில் வழி தெரியாமல் சிக்கிய தென்காசி இளைஞர்கள்..

தென்காசியை சேர்ந்த ஆஷிக், ஷெரீப் ஆகியோர் இரண்டு பேரும் தமிழக – கேரள எல்லையான புளியரை அடுத்த ஆரியங்காவு பாலருவி வனப்பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது ஆர்வமுடன் இரண்டு வாலிபர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று வழி தெரியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர். இதைக் கண்ட குடும்பத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தென்மலை வனத்துறையினர் மற்றும் போலீசார் போன் லொகேஷனை வைத்து நள்ளிரவு 12 மணி அளவில் இருவரையும் மீட்டுள்ளனர்.

இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையை வெகுவாக பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *