தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கழுநீர்குளம் நேதாஜி தெருவைச் சேர்ந்த மாரிபாண்டியன் மகன் மாடசாமி. இவர் கடந்த பிப். 27ஆம் தேதி சிவராத்திரி விழாவுக்காக கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது, மர்ம நபர்கள் வீடு புகுந்து நகைகள், பணம், பல்வேறு ஆவணங்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில், வீரகேரளம்புதூர் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
அதே தெருவைச் சேர்ந்த முப்புடாதி மகன் வேல்சாமி என்ற எம்எல்ஏ கண்ணன் (37), பாண்டியன் தெருவைச் சேர்ந்த சைவத்தேவர் மகன் மாரிபாண்டியன் என்ற சைசா (39) ஆகிய இருவருக்கும் இத்திருட்டில் தொடர்பிருப்பதும், நிலப் பத்திரங்கள், சான்றிதழ்கள், ஆவணங்களை அருகேயுள்ள கிணற்றில் வீசியதாகவும், விசாரணையில் தெரியவந்தது.
82 கிராம் தங்க நகைகள், 95 கிராம் வெள்ளி நகைகள், ரூ. 12 ஆயிரத்தை போலீஸார் மீட்டதுடன், திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்
Leave a Reply