கடையநல்லூர் புரோட்டா கடையின் ஓட்டை பிரித்து கடைக்குள் இறங்கி மைதா மாவை திருடிய 2 திருடர்கள் கைது
கடையநல்லூர் பேட்டை மேற்கு மலம்பாட்டை தெரு நயினா முஹம்மது மகன் கப்பல் நாகூர் மைதீன்(52)
இவரது வீட்டின் அருகே புரோட்டா கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு கப்பல் நாகூர் மைதீன் சென்று விட்டு காலை கடையை திறக்க வந்தார்.
அப்போது கடையின் மேற்கூரை ஓடுகள் திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியில் பணம் இல்லாததால் திருடர்கள் காலையில் புரோட்டா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 420 ரூபாய் மதிப்புள்ள10 கிலோ மைதா மாவை திருடி சென்றது தெரிய வந்தது இந்த திருட்டு சம்பவம் குறித்து கப்பல் நாகூர் மைதீன் கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஆடிவேல் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் நள்ளிரவு நேரத்தில் அந்த பகுதியில் இரண்டு பேர் நபர்கள் சுற்றி திரிந்ததும் தெரிந்தது அதன் அடிப்படையில் போலீசா தீவிரமாக விசாரணை நடத்தியதில் மேலகடையநல்லூர் பகுதி சேர்ந்த ஆறுமுகம் மகன் லட்சுமணன் (33) பிச்சையா மகன் திருமலைமுத்து (50) என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இருவரையும் பிடித்து விசாரணை செய்த பொழுது நள்ளிரவில் ஓட்டை பிரித்து கடைக்குள் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்தோம் பணம் இல்லாததால் மைதா மாவை தூக்கிச் சென்றோம் என விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்தனர்.
Leave a Reply