Advertisement

புளியரை அருகே காதலியை வெட்டிய காதலன் – பரபரப்பு தகவல்கள்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள புளியரை கற்குடி பகுதியை சேர்ந்தவர் திருமலைக்குமார். இவருக்கும் தெற்குமேடு பகுதியை சேர்ந்த கண்ணகி (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த சில வருடங் களுக்கு முன்பு காதல் மலர்ந்த நிலையில், இருவரும் பல்வேறு இடங்களில் ஊர் சுற்றி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கண்ணகி ஆசைப்பட்டாள் என்பதற்காக அவள் ஆசைப்படி அழகான வீடு ஒன்றை திருமலைக்குமார் கட்டிய நிலையில், கண்ணகி என்ன சொல்கிறாரோ அதை யெல்லாம் கேட்கும் நல்ல பையனாக திருமலைக்குமார் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில், கண்ணகி மனதில் என்ன தோன்றியதோ தெரியவில்லை திடீரென திருமலைக்குமாரின் காதலை சமீபகாலமாக ஒதுக்கி வந்துள்ளார்.

இது தொடர்பாக, திருமலைக்குமார் கேட்டபோது உன்னுடன் பழக எனக்கு விருப்பமில்லை என்ற வார்த்தையும் கண்ணகி கூறிய நிலையில், இதனால்திருமலைக்குமார் கடுமையான மன வேதனைக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மனவிரக்தியில் இருந்த திருமலைக்குமார் தனது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு கண்ணகி வீடு தேடி சென்று அவளை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த கண்ணகியைமீட்டுபோலீசார் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கண்ணகி அனுப்பி வைக்கப் பட்டார். தற்போது அவருக்கு வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணகியை அரிவாளால் வெட்டிய திருமலைக்குமாரை கைது செய்துவிசாரணைநடத்திவருகின்றனர்.

இச்சம்பவம் புளியரைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *