கடையநல்லூர் அருகே 7 மாதத்திற்கு பின் கொலையாளி கைது..
மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17 வயது தொழில் கல்லூரி மாணவன் கைது..
கடையநல்லூர் அருகே சின்னத்தம்பிநாடாரூர் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த கடக்கண் மனைவி பொண்ணு கிளி வயது 68 இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஊருக்கு அருகே தனக்கு சொந்தமான மாடு மற்றும் தனது தம்பிக்கு சொந்தமான மாடு ஆகியவற்றை மேய்த்துக் கொண்டிருந்தார் மாலை 5 மணி ஆனதும் மாடு மேய்க்கச் சென்ற பொண்ணு கிளி வீடு திரும்பாததால் அவரின் மருமகன் மாரிச்செல்வம் அத்தையை தேடி காட்டுப் பகுதிக்கு சென்ற பொழுது மூதாட்டி பொண்ணு கிளி பலத்த காயத்துடன் மயங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்து மருமகன் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஊருக்குள் தகவல் சொன்னார் அதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற பொது மக்கள் மூதாட்டியை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து சிகிச்சை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சேந்தமரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
குற்றவாளிகள் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி மேற்பார்வையில் கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் உட்பட 10க்கு மேற்பட்ட தனிப்படை 70க்கும் மேற்பட்ட போலீசார் மாறுவேடத்தில் இந்த வழக்கு சம்பந்தமாக இரண்டு மாதம் சேந்தமரம் காவல் நிலையத்தில் தங்கி இருந்து சுற்று வட்டார கிராமத்தில் உள்ள நபர்களின் மொபைல் எண்களுக்கு வந்த 3000 செல்போன் அழைப்புகளையும் சம்பவம் நடந்த இடத்தை சுற்றிலும் உள்ள 40க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மொபைல் சிக்னல்கள் மூலம் குற்றவாளியை தேடியும் அதற்கான எந்தத் தடையமும் சிக்காததால் போலீசாருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தனர் இருப்பினும் தற்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் துப்பு துலங்காத வழக்குகளை தீவிரமாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என உத்திரவிட்டத்தின் பெயரில் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை செய்ததில் இறந்த பொண்ணுக்கு கிளிக்கும் நெருங்கிய உறவினரான கனி என்பவருக்கும் நீண்ட காலமாக இடப் பிரச்சினை இருந்து வந்ததாகவும் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி கனி என்பவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை தொடர்ந்து கனிகும் சித்தியான பொண்ணு கிளிக்கும் நீண்ட கால பகை இருந்து வந்ததை தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கனி மற்றும் அவருடைய 17 வயது மகன் ஆகியோரை விசாரணை செய்ததில் கனியின்17 வயது மகன் வயலுக்கு செல்லும்போதும் திரும்பி வரும் பொழுதும் மாடு மேய்த்துக் கொண்டிருந்த உறவினரான மூதாட்டி பொண்ணு கிளி தொடர்ந்து அவதூறாக அசிங்கமாக பேசி வந்ததால் ஆத்திரமடைந்த 17 வயசு சிறுவன் தனது கையில் இருந்த கம்பியால் மூதாட்டி பொண்ணு கிளியை அடித்துள்ளார் இதில் மயங்கிய பொண்ணு கிளியை அப்படியே போட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் என போலீசில் வாக்குமூலம் அளித்தார் இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆடிவேல் 17 வயது சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் 17 வயது சிறுவன் என்பதால் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்
சுமார் 7 மாதங்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு குற்றவாளியை கண்டுபிடித்த இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் பாராட்டினார்.
Leave a Reply