Advertisement

சங்கரன்கோவிலில் சொர்கவாசல் திறப்பு – வீடியோ

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரை திருநாள் கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 7-ம் திருநாளான இன்று (ஜனவரி 10) காலை 8.45 மணிக்கு பெருமாள் சயன கோலத்தில் பரமபத வாசல் வழியாக வந்து பெரிய ஆழ்வார் மற்றும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சங்கரன்கோவிலில் சொர்கவாசல் திறப்பு

சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய திருவிழாவான வருகிற 7-ந் தேதி ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாராதனையும் நடைபெற்றது. இத்தொடர்ந்து வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சொர்கவாசல் திறப்பின் போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *