Advertisement

சாக்கடை கழிவுநீர் கலப்பதால் மாசுபடும் நீர்நிலைகள் – தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பேரூராட்சி 18-வார்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. அனைத்து வார்டு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்தந்த பகுதி கண்மாய்கள், ஆறுகள்,குளங்களில் சங்கமித்து சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது.

வாசுதேவநல்லூர் பேரூராட்சி 2,3,4-வது வார்டு பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வரும் கழிவுநீர் அப்பகுதியில் உள்ள கலிங்கல் ஆற்றில் கலங்குகிறது. மேலும் மற்ற வார்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவு நீர் இறங்கும் இளங்குளம் கண்மாய்,கருப்பையாறு போன்ற நீர்நிலைகளில் கலக்கும் போது
சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நிலத்தடி நீர் மாசடைகிறது.

கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரப்புகின்றன. துர்நாற்றமும் வீசுகிறது. இது சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுரேஷ் நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரின் முகவரியில் கோரிக்கை மனு பதிவு செய்துள்ளார். அதற்கு பேரூராட்சி நிர்வாகம் தெருக்களின் வெளிப்பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்புதொட்டி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு இங்கு சேகரமாகும் கழிவு நீரை சிவகிரி, வாசுதேவநல்லூர், இராயகிரி பேரூராட்சிக்கு என பிரத்யோகமாக அமைக்கப்படவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கொண்டு சேர்க்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய நடவடிக்கை தெரிவிக்கப்படுகிறது என்ற பதில் கடிதம் அளித்துள்ளார்கள்.

இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், நீர்நிலைகளை மாசுபடுத்தி வருகிறது. இதனால், நீர்நிலைகளின் தரம் பாதிக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுகிறது எனவே பேரூராட்சி நிர்வாகம் விரைவாக வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *